திருப்பூரில் காவல்துறையினருக்கான அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் - ஆர்வமுடன் காவலர்கள் வாக்கு பதிவு

திருப்பூர் குமரன் சாலையில் இன்று காவல்துறையினருக்காக அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் திருப்பூரில் பணியில் உள்ள காவலர்கள் தங்களது தபால் வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் தேர்தல் நாளன்று தங்கள் வாக்கை பதிவு செய்ய முடியாத வகையில் பல்வேறு இடங்களில் பணி செய்யும் சூழல் உள்ளதால் அவர்களுக்கு அஞ்சல் வாக்கு வழங்கப்பட்டு முன்கூட்டியே செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.



அதன்படி திருப்பூர் குமரன் சாலையில் இன்று காவல்துறையினருக்காக அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் திருப்பூரில் பணியில் உள்ள காவலர்கள் தங்களது தபால் வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் பிற பகுதிகளில் உள்ள காவலர்களும் தனித்தனியே தங்கள் வாக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் வாக்கு பதிவை திருப்பூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...