காவிரி நதிநீர் பிரச்சினை ஏன் தீர்க்காமல் உள்ளது - மத்திய அரசுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி

மத்திய அரசுதான் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று அரைவேக்காட்டுத்தனமாக சிலர் சொல்லி வருகின்றனர் என்று சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



அப்போது பொதுமக்கள் அவர்களுக்கு தலைப்பாகை அணிவித்து தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, மத்திய அரசுதான் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று அரைவேக்காட்டுத்தனமாக சிலர் சொல்லி வருகின்றனர். அப்படியானால் காவிரி நதிநீர் பிரச்சினையை 50 ஆண்டு காலம் ஏன் இன்னும் தீர்க்காமல் வைத்துள்ளார்கள் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் கேரளா அரசுக்கு தேவையான தண்ணீரை தமிழக அரசு வழங்கும். தமிழக அரசுக்கு தேவையான தண்ணீரை கேரளா அரசு வழங்கும் என்ற அடிப்படையில் சகோதரத்துடன் இரு மாநில முதல்வர்களும் பேச்சு வார்த்தை நடத்தி உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் திமுக ஆட்சி திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. மத்திய அரசு தேவையான அளவு நிதியை வழங்கலாம். மத்திய அரசு நிதி இல்லாமலேயே அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல் பாண்டியரு - புன்னம்பலா திட்டத்தை நிறைவேற்றவும், அதிமுக ஆட்சியில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது ஆனைமலையாரு நல்லாறு திட்டம் பாண்டியாரு -புன்னம்பலா திட்டத்தின் மூலம் தல பத்து டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிற அக்கறையும் ஆற்றலும் அதிமுகவுக்கு தான் உள்ளது. இதை வேறு யார் சொன்னாலும், அது தேர்தலுக்காக கொடுக்கும் பொய்யான வாக்குறுதி தான் என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...