பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி தாராபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

பிஏபி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து பொன்னாபுரம் பிரிவு என்ற இடத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் ருத்ராவதி, செங்காளிபாளையம், கணபதிபாளையம், சுங்கிலியம்பாளையம் உள்ளிட்ட பி.ஏ.பி. பாசனம் பெறும் பகுதிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு முதல் சுற்று தண்ணீர் விடப்பட்டது. முதல் சுற்று தண்ணீர் குறிப்பிட்ட கால இடைவெளியில் விடப்பட்ட நிலையில், 2-வது சுற்று தண்ணீர் இதுநாள் வரை திறக்கப்படாததால் முதல் சுற்று தண்ணீரை நம்பி பயிர்செய்த விவசாயிகள் தொடர்ந்து செய்த பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனது.

இதனால் பயிர்கள் கருகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி குண்டடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முறையிட்டு விரைந்து தண்ணீர் திறக்கக் கோரியும் பொதுப்பணித்துறையினர் செவி சாய்க்காத காரணத்தினால் நேற்று முன்தினம் பி.ஏ.பி. பாசனம் பெறும் ஆயக் கட்டு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பல்லடம் பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ.நேரில் வந்து விவசாயிகளிடையே பேசினார்.



அப்போது விரைந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று தாராபுரம் கோவை மாநில நெடுஞ்சாலையில் பொன்னாபுரம் பிரிவு என்ற இடத்தில் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் பிஏபி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பேருந்தில் கல்லூரி செல்வதற்காக காத்திருந்த மூன்று மாணவிகளை விவசாயிகள் காரில் அழைத்துச் சென்று பல்லடம் பேருந்து நிலையத்தில் மூன்று மாணவிகளை விவசாயிகள் இறக்கி விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...