வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என வால்பாறையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

ஆழியாறு சோதனை சாவடி, அட்டகட்டி வாட்டர்பால்ஸ், ஐயர் பாடி 40 ஆவது கொண்டை ஊசி வளைவு, வால்பாறை மையப்பகுதி, சோலையார் அணை பகுதி, கேரளா தமிழக எல்லையான மலுக்கபாறை பகுதி ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் ஐன்பது ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணம் இன்றி வாகனத்தில் கொண்டு செல்லும் பணத்தை சோதனை செய்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.



இதில் வால்பாறை பகுதியில் முதன்மை பறக்கும் படை குழுவினர் மற்றும் இரண்டாம் நிலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர. நள்ளிரவு ஒரு மணி அளவில் வால்பாறை டவுன் பகுதியில் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

Fst 3,124 b d o பாலசுப்ரமணியம் மற்றும் காவல் துறையினர் ஜகவர் மற்றும் வீடியோ கிரபார் விமல், இராணுவ வீரர்கள், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆழியாறு சோதனை சாவடி, அட்டகட்டி வாட்டர்பால்ஸ், ஐயர் பாடி 40 ஆவது கொண்டை ஊசி வளைவு, வால்பாறை மையப்பகுதி, சோலையார் அணை பகுதி, கேரளா தமிழக எல்லையான மலுக்கபாறை பகுதி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...