கோவை வரும் ரயில்களின் நேரம் மற்றும் சேவையில் மாற்றம் - கோவை தெற்கு ரயில்வே அறிவிப்பு

இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், 17ம் தேதி கோயம்புத்தூர் ஜங்க்சனில் நிற்காது. இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என்று கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏப்ரல்.16 வெளியிட்டுள்ள அறிக்கையில், போத்தனூர் ரயில்வே யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒரு சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

பின்வரும் ரயில்கள் 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் ரயில் எண்.13351 தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், 17ம் தேதி கோயம்புத்தூர் ஜங்க்சனில் நிற்காது. இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில் 2 நிமிடம் நிறுத்தப்படும்.

ரயில் எண்.06819 ஈரோடு - பாலக்காடு டவுன் ரயில் 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். அதனால் சிங்காநல்லூர், பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படாது.

ரயில் எண்.16159 சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் ௳த்திய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது.

ரயில் எண்.22504 திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். அதன் விளைவாக கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையத்தில் நிறுத்தம் தவிர்க்கப்படும்.

பின்வரும் ரயில் 17.04.2024 அன்று மாற்றியமைக்கப்படும். ரயில் எண்.06805 வழக்கமாக கோயம்புத்தூர் - ஷோரனூர் ரயில், கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து 11.55 மணிக்குப் புறப்படும், 17ம் தேதி கோவையில் இருந்து மதியம் 1.05 மணிக்குப் புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...