நமக்கான தலைவர்களை நாம் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் - கோவையில் விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் பேச்சு

இன்றைய நாள் நமக்கான நாள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் வெள்ளிக்கிழமை இன்று (ஏப்ரல்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தினர்.



இந்நிலையில், கோவையில் விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம், கோவை லாலி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் இது குறித்து, விளையாட்டு மேம்பாட்டு துறை மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம் கூறுகையில், இன்றைய நாள் நமக்கான நாள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கோவை மாவட்டம் மக்கள் தொகையிலும், சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் மற்றும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம், மேம்பால பணிகள், மெட்ரோ திட்டம் என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக அனைத்து கட்சியினரும் தெரிவித்துள்ளனர். எனவே இன்றைய நாளில் நமக்கு தேவையான தலைவர்களை நாம் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...