உடுமலை அருகே தமிழக கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

உடுமலை அருகே தமிழக கேரளா எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனை சுவாடி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


திருப்பூர்: கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பண்ணைகளில் பராமரிக்கப்பட்டு வந்த வாத்து, கோழிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொத்து கொத்தாக இறந்தன. அதைத் தொடர்ந்து வாத்துகளை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் தாக்குதல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தமிழக - கேரளா எல்லைகளில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டு உள்ளது.



கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர், இரண்டு கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக சுழற்சி முறையில் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களின் சக்கரங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் கோழி இறைச்சி, முட்டை, கோழி தீவனம் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கோழி பண்ணைகளில் கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது எதிர்பாராமல் அதிக அளவு கோழிகள் இறந்தால் உடனடியாக கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த சோதனையானது பறவை காய்ச்சல் நோய் கட்டுக்குள் வரும் வரை மேற்கொள்ளப்படும் என்று கால்நடை துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த பணிகளை திருப்பூர் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் புகழேந்தி ஆய்வு செய்தார். உடன் உடுமலை உதவி இயக்குனர் ஜெயராம், கால்நடை மருத்துவர்கள் ராஜ சொக்கப்பன், அப்துல் கலாம் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...