திறந்தவெளி ஒதுக்கீட்டு இடத்தில் பூங்கா - ஜூலை 1ம் தேதிக்குள் பதிலளிக்க கோவை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

ஓ.எஸ்.ஆர். இடம் மீட்கப்பட்டு பூங்கா அமைப்பது தொடர்பான வழக்கில் ஜூலை 1ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கோவை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


கோவை: பார்சன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாக பதிலளிக்க மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோவை, நஞ்சுண்டாபுரம் ரோடு, பார்சன் குடியிருப்பில், 610 வீடுகள் உள்ளன. இக்குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் 'கார் பார்க்கிங்', 'ஸ்டோர்' அமைக்கப்பட்டுள்ளதால், இடத்தை மீட்டு பூங்கா அமைத்துத்தரக்கோரி அப்பகுதியினர் மாநகராட்சிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து, கடந்த, 2019ம் ஆண்டு அங்கு வசிக்கும் பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கனகசுந்தரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இதுதொடர்பாக, ஜூலை 1ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கனகசுந்தரம் கூறுகையில்,''இங்குள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் பூங்கா அமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரக்கோரி மாநகராட்சியிடம் கடந்த, 2019ல் மனு அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தேன். தற்போது, அது உயிர்பெற்றுள்ளது. ஓ.எஸ்.ஆர்., இடம் மீட்பு விஷயத்தில் ஜூலை 1க்குள் கட்டாயம் மாநகராட்சி பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐகோர்ட் எச்சரித்துள்ளது. எனவே, பணிகள் வேகமெடுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...