தமிழக தபால்காரர் பணிக்கு வடமாநிலத்தவரை மோசடி செய்து தேர்வு செய்ததைக் கண்டித்து கோவையில் தலைமை அஞ்சலகம் முற்றுகை

தமிழகத்தில் தபால்காரர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் மோசடி செய்து வட மாநிலத்தவரை தேர்வு செய்ததாகக் கூறி, கோவையில் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழகத்தில் தபால் துறையில் காலியாக இருந்த 300 தபால்காரர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் மோசடி செய்து வட மாநிலத்தவர்களை தேர்வு செய்ததாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை கூட்ஸ்ஷெட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு அவ்வமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது முழக்கங்களை எழுப்பியபடி அஞ்சலகத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தபால்காரர் பணியிடங்களுக்காக நடத்தபட்ட எழுத்துத் தேர்வில் தமிழ் தெரியாத வட மாநிலத்தவர்கள் தமிழ் மொழி தேர்வில் 100-க்கு 90 மதிப்பெண்கள் பெற்று எப்படி தேர்ச்சி பெற்றனர் என கேள்வி எழுப்பிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், எழுத்து தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தேர்வில் குளறுபடி செய்து தமிழர்களின் வேலை வாய்ப்புகள் பறித்து வட மாநிலத்தவர்களுக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதேபோல மத்திய அரசு பணியிடங்களில் தொடர்ந்து தமிழர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தபால்காரர் பணியிட நியமனங்களை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...