என்ஐஆர்எஃப் தரவரிசையில் பாரதியார் பல்கலைக்குட்பட்ட 12 கல்லூரிகள் தேர்வு


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட 12 கலை அறிவியல் கல்லூரிகள் இடம்பெற்று சாதனைபடைத்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் (மனிதவளத்துறை) தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் இந்திய பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசையினை திங்களன்று வெளியிட்டுள்ளது.

இதில் ஒட்டுமொத்த தரவரிசையில் பாரதியார் பல்கலைக் கழகம் இந்திய அளவில் 28-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. ஆராய்ச்சி வெளியீடுகள் சார்ந்த மதிப்பீட்டு படி, பாரதியார் பல்கலைக்கழகம் இந்திய பல்கலைக்கழகங்கள் மத்தியில் 14-வது இடத்தை பெற்றுள்ளது.

மேலும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பன்னிரண்டு இணைப்பு கல்லூரிகள் தேசிய அளவில் உள்ள கல்லூரிகள் தரவரிசையில் முதல் 100 இடத்திற்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகள் தரவரிசையில் பெற்றுள்ள இடங்கள் 

பி எஸ் ஜி   கலை அறிவியல் கல்லூரி- 11

பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணமாள் மகளிர் கல்லூரி-14

கொங்குநாடு கலை அறிவியல் கல்லுரி-19

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி-22

என்ஜிபி கலை அறிவியல் கல்லூரி-44

கோபி கலை அறிவியல் கல்லூரி-57

கொங்கு கலை அறிவியல் கல்லூரி-63

நிர்மலா கலை அறிவியல் கல்லூரி- 65

ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி- 66

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி-68

எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி-69

ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி-75

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...