பயணச்சீட்டு பரிசோதனையில் ஒரே நாளில் அதிக தொகை வசூலித்து சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகள் சாதனை

பயணச்சீட்டு இல்லாமல் ரயில்களில் பயணம் செய்வதை குறைக்கும் பொருட்டும், பயணிகளிடையே பயணச்சீட்டு வாங்கும் பழக்கத்தை மேம்படுத்தவும், சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு தொடர்ந்து பல்வேறு நாட்களில் திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி கடந்த ஏப்ரல் 2ம் தேதியன்று சேலம் கோட்ட வணிகவியல் பிரிவின் 231 பயணச்சீட்டு பரிசோதகர்கள் சேலம் கோட்ட வணிக மேலாளர் கே.மாது தலைமையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர், கரூர் உள்ளிட்ட சேலம் கோட்டத்தின் அனைத்து ரயில்நிலையங்களிலும் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

அதில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 755 நபர்களிடமும், மற்றும் சரியான தொகை செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சரக்குகளை எடுத்துச் சென்ற 11 நபர்களிடமும் என மொத்தம் 3,37,595 ரூபாய் பயணச்சீட்டு தொகை, சரக்குக்கட்டணம், மற்றும் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.

இத்தொகை சேலம் கோட்டம் துவக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை ஒரு நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்சத் தொகையாகும். இதற்கு முன்னர், 5.03.2017 அன்று இவ்வாறு நடத்தப்பட்ட திடீர் பயணச்சீட்டு பரிசோதனையின் போது வசூலிக்கப்பட்ட 2,47,025 ரூபாய்தான் அதிகபட்ச தொகையாகும்.

சேலம் பயணச்சீட்டு பரிசோதனைக் குழுவின் பறக்கும் படையை சேர்ந்த எம்.மனோ செல்வம் மற்றவர்களை விட அதிகமாக அதாவது 35,780 ரூபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதத் தொகையாக வசூலித்து சிறப்பாக செயல்பட்டார்.

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மற்றும் அவர் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா பாராட்டியதுடன், தொடர்ந்து இத்தகு திடீர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...