கோவையில் காவலர்களின் குழந்தைகளுக்கான WET CLAY பயிற்சி வகுப்பு துவங்கியது

கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவலர்களின் குழந்தைகளுக்கான WET CLAY பயிற்சி வகுப்புகள் கோவை மாநகர் காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் இன்று துவங்கின. 6 நாட்களில் சுத்தம், தன்னம்பிக்கை போன்றவை கற்பிக்கப்படும்.


கோவை: கோவையில் மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவலர்களின் குழந்தைகளுக்கான 6 DAYS WET CLAY பயிற்சி வகுப்பு துவங்கியது.



இத்திட்டம் மே 8, 11, 13, 15, மற்றும் 17 ஆகிய நாட்களில் நடைபெறும். இந்த பயிற்சியில் காவலர் குடும்பத்தை சார்ந்த குழந்தைகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் 102 மாணவ/மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த பயிற்சி வகுப்பில் SPIEGEL TRAINING AND FOUNDATION நிறுவனர் சத்தியமூர்த்தி சீரிய பயிற்சிகளை நடத்துகிறார். இப்பயிற்சிகளில் சுத்தம், தன்னம்பிக்கை, சுய மதிப்பு, சுய ஒழுக்கம், உணவு வழக்க வழக்கங்கள், மற்றும் தனித்திறமையை கண்டறிதல் ஆகியவை பயிற்சியாக வழங்கப்படுகின்றன.

இதுபற்றி பேசிய பாலகிருஷ்ணன் மாணவ/மாணவிகளை தங்களது ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்றும், தங்களது முடிவுகள் தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கோவை மாநகர் ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகரும் பங்கேற்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...