கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.


கோவை: கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அந்த சிறுமிக்கு நீதி கேட்டு கோவையில் உள்ள ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

குழந்தையின் ஆன்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.



சமூகத்தில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் மக்களுக்காக இயங்கி வரும் இந்தக் காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்கள், தங்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். "ஒரு பிஞ்சு குழந்தைக்கு இப்படிப்பட்ட கொடுமை எப்படி நடந்தது?" என்ற வேதனையும், கோபமும் கலந்து அவர்களின் முகங்களில் வெளிப்பட்டது.

இந்த நிகழ்வில், குற்றவாளிகளுக்கு POCSO சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மனவலிமை கிடைக்க வேண்டும், இனி எந்தக் குழந்தைக்கும் இதுபோன்ற கொடுமை நேரக்கூடாது என்பதற்காக குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலி நிகழ்வு, ஒரு சாதாரண அஞ்சலியாக இல்லாமல், "குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்" என்ற சமூகத்தின் மனவேதனையை வெளிப்படுத்தும் உருக்கமான தருணமாக மாறியது.

"பெற்ற மனம் பதறுகிறது… பிஞ்சு உயிரின் அலறலுக்கு சட்டம் மிகக் கடுமையான நீதியை வழங்கட்டும்!" என்ற வாசகத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

சூலூர் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...