கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.


கோவை: கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அந்த சிறுமிக்கு நீதி கேட்டு கோவையில் உள்ள ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

குழந்தையின் ஆன்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.



சமூகத்தில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் மக்களுக்காக இயங்கி வரும் இந்தக் காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்கள், தங்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். "ஒரு பிஞ்சு குழந்தைக்கு இப்படிப்பட்ட கொடுமை எப்படி நடந்தது?" என்ற வேதனையும், கோபமும் கலந்து அவர்களின் முகங்களில் வெளிப்பட்டது.

இந்த நிகழ்வில், குற்றவாளிகளுக்கு POCSO சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மனவலிமை கிடைக்க வேண்டும், இனி எந்தக் குழந்தைக்கும் இதுபோன்ற கொடுமை நேரக்கூடாது என்பதற்காக குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலி நிகழ்வு, ஒரு சாதாரண அஞ்சலியாக இல்லாமல், "குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்" என்ற சமூகத்தின் மனவேதனையை வெளிப்படுத்தும் உருக்கமான தருணமாக மாறியது.

"பெற்ற மனம் பதறுகிறது… பிஞ்சு உயிரின் அலறலுக்கு சட்டம் மிகக் கடுமையான நீதியை வழங்கட்டும்!" என்ற வாசகத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

சூலூர் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...