ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1.03 கோடி அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை: ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில், இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரிய மணலி பகுதியில், கடந்த 2012-ஆம் ஆண்டு "ஆதவன்" என்ற பெயரில் ஈமு கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடத்தி வந்தனர். முதலீட்டாளர்களை கவரும் வகையில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள் வழங்கப்படுவதுடன், 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குறுதிகளை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்த நிலையில், முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட பின்னர் வாக்குறுதியின்படி தொகை வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், 115 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், பண்ணை உரிமையாளர்களான சந்திரசேகரன், சோமசுந்தரம், கணக்கர் அமுதா மற்றும் பங்குதாரர்களான ராமகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணையில் நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார். அதன்படி, சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...