ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1.03 கோடி அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை: ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில், இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரிய மணலி பகுதியில், கடந்த 2012-ஆம் ஆண்டு "ஆதவன்" என்ற பெயரில் ஈமு கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடத்தி வந்தனர். முதலீட்டாளர்களை கவரும் வகையில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள் வழங்கப்படுவதுடன், 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குறுதிகளை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்த நிலையில், முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட பின்னர் வாக்குறுதியின்படி தொகை வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், 115 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், பண்ணை உரிமையாளர்களான சந்திரசேகரன், சோமசுந்தரம், கணக்கர் அமுதா மற்றும் பங்குதாரர்களான ராமகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணையில் நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார். அதன்படி, சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...