தாராபுரம் அருகே கோவிலுக்கு சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம் - மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

மூலனூர் அருகே பட்டுத்துறை என்ற இடத்தில் உள்ள மலையாள கருப்பண்ணசாமி கோவில் விழாவிற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி 19 பேர் காயமடைந்தனர். மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரை அடுத்த துலுக்கவலசு அருகே கட்டுப்பாட்டை இழந்த டாட்டா ஏஸ் வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.



மூலனூர் அருகே உள்ள பட்டுத்துறை என்ற இடத்தில் மலையாள கருப்பண்ணசாமி கோவில் விசேஷத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டாட்டா ஏஸ் வாகனத்தில் கோவிலுக்கு வந்து கொண்டிருந்த வழியில் எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் (56), ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சத்யா (14), அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகலை (35,) நாகரத்தினம் மார்க்கம்பட்டி, மாரியம்மாள் (36), செல்வபிரியா (13), ஈஸ்வரி வயது 39, மற்றொரு ஈஸ்வரி வயது 30, பொட்டியம்மாள் (55) இறந்தவர், லட்சுமி வயது 47, சுப்பிரமணி 60, பழனியம்மாள் (70) ஆகியோர் காயம் அடைந்தனர்.



காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 12-நபர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், மீதமுள்ள 8- நபர்களை வெள்ளகோவில் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மூலனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...