இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தியும், பல்கலைக்கழகங்களில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தியபடி கோவை BSNL அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இஸ்ரேல் பாலஸ்தீன போரில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் உள்ள மாணவர்கள் போராடி வருகின்றனர்.



குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் போராடக்கூடிய மாணவர்கள் மீது அமெரிக்க காவல்துறை கொடூரமாக தாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இந்த போராட்டத்தில் போராடக்கூடிய மாணவர்களுக்கு ஆதரவாகவும், உடனடியாக இஸ்ரேல் பாலஸ்தீன போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து மாநில முழுவதும் SFI அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை BSNL அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இஸ்ரேல் பாலத்தீன போரை நிறுத்த வலியுறுத்தியும், பல்கலைக்கழகங்களில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...