மாங்கரை ஓடைப் பகுதியில் யானை உயிரிழப்பு - காரணம் குறித்து வனத்துறையினர் ஆய்வு

மருத்துவக் குழுவினர் நடத்திய ஆய்வில் நுரையீரல் பாதிப்பால் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நுரையீரல் பாதிப்பால், மற்ற உள் உறுப்புகளும் பாதிப்படைந்து யானை உயிரிழந்துள்ளது.


கோவை: கோவை வனத்துறையினர் நேற்று மே.7 காலை மாங்கரை பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் அருகே உள்ள மாங்கரை சரக வனப்பகுதியில் வனத்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வனப்பகுதிக்கு வெளியே வனப்பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள வனத்திற்குள் இருந்து வருகின்ற மாங்கரை ஓடை பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். பின்னர், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் திருமுகன் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அதில், உயிரிழந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்த யானையின் உடலை மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அதில், யானை நுரையீரல் நோயால் பாதிப்படைந்தது தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "உயிரிழந்த யானையின் உடலை வனத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

யானையின் நுரையீரல் பாதிப்பால், அதன் மற்ற உள் உறுப்புகளும் பாதிப்படைந்ததில் யானை உயிரிழந்துள்ளது. மேலும், யானையின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவிற்கு பிறகு தான் யானையின் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தெரியவரும் என வனத்துறையினர் கூறினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...