கஞ்சா வழக்கு விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை மதுரை அழைத்து சென்ற தேனி போலீசார்

கஞ்சா வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தேனி போலீசார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று காலை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.


கோவை: யூடியூப்பர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி சவுக்கு சங்கரை தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தேனி போலீசார் நேற்று (07-05-2024) அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தேனி போலீசார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று (08-05-2024) காலை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.

ஏற்கனவே அவர் தேனியில் இருந்து கைது செய்யப்பட்டு கோவை அழைத்து வந்தபோது திருப்பூர் அருக விபத்தில் சிக்கினார். எனவே இந்த முறை விபத்தில் வேன் சிக்காத வகையில் பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு போலீஸ் வாகனம் சவுக்கு சங்கரை மதுரை அழைத்து சென்றது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...