கோவை மேட்டுப்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி, குண்டத்தில் மல்லிகை மலர்ச் செண்டை வீசி குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார். பின்னர், உதவி பூசாரிகள் குண்டம் இறங்கினர். அவர்களைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாக்குக்கார வீதியில் அருள்மிகு மாகாளியம்மன் திருக் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 23ஆம் தேதி கணபதி ஹோமம் பொரிச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிளக்கு பூஜை, அக்னி கம்பம் நடுதல், பேட்டை மகா மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல், குண்டம் திறத்தல், நகைப்பெட்டி எடுத்து வருதல், அக்னி வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து இன்று (மே.8) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி பவானி ஆற்றங்கரையில் இருந்து அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சியையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளிய வண்ணம் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தது.



அதன் பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி கையில் வேல் எடுத்து குண்டத்தை வலம் வந்து பூஜை செய்தார். குண்டத்தில் மல்லிகை மலர்ச்செண்டை வீசி பயபக்தியுடன் அம்மனை மனதில் நினைத்து குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.

அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள் சுரேஷ் கோலக் கூடை எடுத்தும், மனோஜ் சக்தி கரகம் எடுத்தும், சுதர்சன் சிவன் கரகம் எடுத்தும் குண்டம் இறங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...