செண்டுமல்லி வளர்ப்பின் மூலம் நூற்புழுக்கள் குறைந்து மகசூல் அதிகரிக்கும் என வேளாண்மைப் பல்கலை தகவல்

நூற்புழுக்களின் தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைவாக உள்ளது.  ஒரே வகையான காய்கறிப் பயிரினையோ அல்லது மற்ற பயிரையோ தொடர்ச்சியாக பயிரிடுவதன் மூலம் இத்தகைய நூற்புழுக்கள் மண்ணில் தங்கி இனத்தை பெருக்கி அடுத்தடுத்து பயிர் செய்யும்போது அதிக அளவில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.



காய்கறிப் பயிர்களில் பட்டம் இல்லா நேரத்தில் பயிர்சுழற்சி முறையில் செண்டுமல்லியை பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களை நன்றாக கட்டுப்படுத்த முடியும். செண்டுமல்லி வேரிலிருந்து ஆல்பா-டெரிதினைல் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது.

இவ்வேதிப்பொருள் மண்ணில் நூற்புழுக்கள், பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒருசில பூச்சிகளை கொல்லும் உயிர் கொல்லி பண்பினை கொண்டது. இந்த ஆல்பா-டெரிதினைல் மண்ணில் உள்ள நூற்புழுக்கள் மற்றும் மண்ணில் உள்ள உயிர்கொல்லிகளின் முட்டைகளின் மீது வேதியியல் பாதிப்பினை ஏற்படுத்தி முட்டை பொறிக்கும் திறனை பெருமளவு குறைக்கிறது.

இதனால் இவ்வுயிர் கொல்லிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு மண்ணில் உள்ள இவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படுகிறது. செண்டுமல்லி உயிருள்ள பயிரின் வேரிலிருந்தே ஆல்பா-டெரிதினைல் சுரக்கிறது. ஆதலால் பயிர் சுழற்சி முறையில் காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை ஊடுபயிராக குறுகிய காலத்திற்கு (2-3 மாதம்) பயிரிடுவதால் நூற்புழு கட்டுப்பாட்டில் நல்ல பலனை பெறமுடியும்.  

எனவே காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை பயிர் சுழற்சி செய்து பின்பு கோடை உழவு செய்தல் மூலம் “வருமுன் காப்போம்” என்ற பழமொழிக்கு ஏற்ப காய்கறிப்பயிர்களால் நூற்புழுக்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறமுடியும் என கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நூற்புழுவியல் துறை ச.சுப்ரமணியன் மற்றும் கி.பூர்ணிமா தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...