கோவை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி வரை இடியுடன் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில், வரும் 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழையும், 16 மற்றும் 17ம் தேதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டியெடுத்த நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி இருக்கும், மழை அளவு எப்படி இருக்கும் என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துக் தற்போது மே.11 கூறியுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில், வரும் 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16,17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதேபோல சென்னையில், 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 16,17 தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெப்ப நிலை குறைந்தது 29 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசில் வரை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரையில், 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 13,14 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. 16,17 தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெப்ப நிலை குறைந்தது 25 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசில் வரை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...