கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

சிறப்பு தடுப்பூசி முகாமில் முதல் நாளான இன்று 120 நபர்களுக்கும், இரண்டாம் நாளான நாளை 119 நபர்களுக்கும், மூன்றாம் நாளில் 115 நபர்களுக்கும் மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசின் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி, சொட்டு மருந்து, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகள் முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.



இந்த சிறப்பு முகாமானது மே 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.



இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஹஜ் யாத்திரை செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.



இதில் முதல் நாளான இன்று 120 நபர்களுக்கும், இரண்டாம் நாளான நாளை 119 நபர்களுக்கும், மூன்றாம் நாளில் 115 நபர்களுக்கும் மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.



இதில் 65 வயதுக்கு மேற்பட்ட 49 நபர்களுக்கு மட்டும் Seasonal Influenza Vaccine பிரத்தியோகமாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...