நெடுஞ்சாலைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதைக் கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கு ஊதி சாவு மணியடித்து போராட்டம்

தமிழக நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் சங்கு ஊதி சாவு மணியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சாலை பராமரிப்பு பணிகளை தமிழக அரசு தனியாரிடம் வழங்குவதை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து பணப்பலன் வழங்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலைப்பணியாளர்கள் சங்கு ஊதி சாவு மணி அடிக்கும் நூதன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை- திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பாக சங்கு ஊதி சாவு மணி அடிக்கும் நூதன போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சாலையை பராமரிக்க 1300 கோடி ரூபாயினை எஸ்.பி.கே என்ற தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் ஒதுங்கி இருப்பதாகவும், அரசே இந்த பணிய நடத்தினால் 300 கோடி மட்டுமே செலவாகும் எனவும், தனியார் நிறுவனம் 1000 கோடி ரூபாய் லாபம்பார்க்கும் வகையில் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் சாலை பணியாளர்கள் கூறினர்.

மேலும், சாலைபணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக கருத வேண்டும். சாலைபணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வுவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர்கள், இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...