தாராபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

தனியார் பள்ளி வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா, கதவுகள் சரியாக இயங்குகிறதா, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளதா, அவசரகால கதவுகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம், குண்டடம், மூலனூர் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் சுமார் 210 பள்ளி பேருந்துகள் இயங்கி வருகின்றன.



தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.



வருவாய் கோட்டாட்சியர் செந்தில்அரசன், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில் குமார், திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வி அதிகாரி ஆனந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெ.செந்தில்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

மொத்தம் 184 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா, கதவுகள் சரியாக இயங்குகிறதா, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளதா, அவசரகால கதவுகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



வாகன ஓட்டுனர்களின் (டிரைவிங் லைசென்ஸ்) ஓட்டுனர் உரிமம் மற்றும் அவர்களின் உடல் தகுதி திறனும் ஆய்வு செய்யப்பட்டது.



அவசரகால மீட்புப் பணி குறித்து ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர். இன்று நடைபெற்ற ஆய்வில் 3 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யபட்டது என வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில்குமார் தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...