ஓடையகுளம் பகுதியில் சூறை காற்றில் வாழை மரங்கள் சேதம் - அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

பெரிய அளவில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.



இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மற்றும் ஓடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாறைப்பதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.



இதன் அடிப்படையில் இன்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஓடையகுளம் பகுதியில் பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, இந்த பகுதியில் பெரிய அளவில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மரங்கள் குறித்து ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை சமர்பித்த பிறகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் வாழைப் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் பெறுவதில் உள்ள சிக்கல்களை களைந்து அதிகாரிகளுடன் பேசி இன்சூரன்ஸ் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், ஆனைமலை உப்பாற்றங் கரையில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ள ஆற்றை பார்வையிட்டார். பின்னர் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.



இதில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளார்கள், தேவ சேனாதிபதி, யுவராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...