கொடுவாய் பகுதியில் தொடர்ந்து நடக்கும் வெறிநாய் தாக்குதல்கள் - விவசாயிகள் வேதனை

திருப்பூர் கொடுவாய் பகுதியில் வெறிநாய்கள் தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சம்பவங்கள் நடந்து வருவதால் விவசாயிகள் கடும் வேதனையில், நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த கொடுவாய் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பங்காம் பாளையம் மற்றும் சாய்ராம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருக்களில் அலையும் நாய்களுக்கு வெறிபிடித்து கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நாளுக்கு நாள் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாகவும் அவை வீடுகள் மற்றும் தோட்டத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளை தாக்குவதாகவும் அப்பகுதி ஊர்ப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பங்காம்பாளையம் பகுதியில் வசிக்கும் முத்துசாமி என்ற விவசாயி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசு கன்றுக்குட்டியை நல்லிரவு சுமார் 1 மணி அளவில் வெறிநாய் கூட்டம் சுற்றி வளைத்து கடித்து கொன்றுள்ளது.



மேலும் கன்று குட்டியை நாய்கள் வேட்டையாடுவதை பார்த்த தாய் மாடு கட்டிவைத்த பகுதியில் சுற்றி சுற்றி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சத்தம் கேட்டு வந்த பசுவின் உரிமையாளர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது நாய்கள் கடித்ததில் இறந்து கிடந்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவம் தினந்தோறும் நடைபெறுவதாகவும், இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இன்றுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வெறிநாய்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிரை காவு வாங்குவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இது சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மனித உயிர்களை காவு வாங்குவதற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...