கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு அருவி, படகு இல்லம் உள்ளிட்ட நீா்நிலை பகுதிகளுக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவெளி விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று காலை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வந்தது.

இந்த தொடா் மழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியது. காலையில் நீா்வரத்து குறைந்து காணப்பட்ட கூழாங்கல் ஆற்றில் பிற்பகலில் நீா்வரத்து அதிகரித்தது.இதைத்தொடர்ந்து வால்பாறை வட்டாட்சியா் வாசுதேவன், காவல் துறை ஆய்வாளா் ஆனந்தகுமார் ஆகியோர் ஆற்றுப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு அருவி, படகு இல்லம் உள்ளிட்ட நீா்நிலை பகுதிகளுக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பதாகவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தற்போது மே.21 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...