கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், கோவை மாநகராட்சி மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று பீளமேடு ஏழாவது பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு பகுதியில் உள்ள ஏழாவது குறுக்கு தெருவில் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சார்பாக இன்று காலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (மே.21) நடைபெற்றது.



இதில், பீளமேடு பகுதிக்கு சிமெண்ட் காங்கிரட், மழை நீர் வடிகால், மின்விளக்கு அமைக்கப்படும் என ஒப்பந்ததாரர் மூலமாக எழுத்து மூலம் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. எனவே, இதனை கண்டித்து பீளமேடு ஏழாவது பகுதி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், கோவை மாநகராட்சி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கோவை மாநகராட்சி மீது கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...