கோவை சுகுணாபுரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா - தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் விழாவில் இன்று சக்தி கரகம் மற்றும் தேர் பவனி நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பங்கேற்று தேர்பவனியை தொடங்கிவைத்தார். பின்னர் பக்தர்களுடன் அவர் உற்சாகமாக நடனமாடியவாறு ஊர்வலமாகச் சென்றார்.



கோவை: கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது.



அதன் ஒருபகுதியாக இன்று ஸ்ரீ சக்தி கரகம், மற்றும் அருள்மிகு ஸ்ரீ சக்திமாரியம்மன் தேர் பவனி இன்று நடைபெற்றது.



இந்த விழாவில் தொண்டாமுத்தூர் எம்எல்ஏ, அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் பவனியை துவக்கி வைத்து, பக்தர்களுடன் உற்சாக நடனமாடியவாறு ஊர்வலமாக நடந்துசென்றார்.

திருத்தேரானது, பி.கே.புதூர், கோவைபுதூர் பிரிவு, உட்பட பாலக்காடு பிராதன சாலைவழியாக ஊர்வலமாக சென்றது. அருள்மிகு ஸ்ரீ சக்திமாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் எடுத்தும், பூ சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.



இளைஞர்களின் சிலம்பாட்டம் மற்றும் வான வேடிக்கை உடன் சுகுணாபுரம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...