திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை பகுதியாக ரத்து

காட்பாடி-சித்தூர் கோட்டத்தில் பொறியியல் பராமரிப்பு பணியால் திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை மே 27, 29, 30 தேதிகளில் பகுதியாக ரத்து.


கோவை: காட்பாடி-சித்தூர் கோட்டத்தில் காட்பாடியை அடுத்துள்ள பொம்மசமுத்திரம் ரயில் நிலையத்தில் புதிய லூப் லைன் அமைக்கும் வகையில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே துறை நேற்று (22.5.2024) அறிவித்துள்ளது. இதனால் திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி ரயில் எண்.22615 திருப்பதி - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் 27.05.2024, 29.05.2024 & 30.05.2024 திருப்பதி - காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு ரயில் இயக்கப்படாது; இது காட்பாடியில் இருந்து புறப்பட்டு, மேற்குறிப்பிட்ட தேதிகளில் கோவை வரை இயக்கப்படும்.

மேலும் (28.05.2024 & 30.05.2024) அன்று திரும்பும் கோயம்புத்தூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (எண்.22616) காட்பாடி திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்; மேற்குறிப்பிட்ட தேதிகளில் காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...