தொண்டாமுத்தூர் மகாராணி அவென்யூவில் காட்டுப் பன்றிகளின் தொல்லை - மக்கள் நடவடிக்கை கோரிக்கை

கோவை தொண்டாமுத்தூர் மகாராணி அவென்யூவில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பகுதியில் காட்டுப்பன்றிகள் கடும் தொல்லை அளிக்கின்றன, நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் மகாராணி அவென்யூ அமைந்து உள்ளது. இங்கு 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். 

இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் காட்டு பன்றிகள் அங்கு வீடுகளுக்கு அருகே உள்ள வாழை மரங்கள் மற்றும் செடிகளை கடித்து சேதப்படுத்துகின்றன. 

இது குறித்து அப்பகுதி மக்கள் மே.22 கூறும் போது, “கடந்த 30 ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். ஆனால் எந்த ஒரு வனவிலங்கு தொந்தரவும் இல்லாத பகுதியாக இந்த குடியிருப்பு இருந்து வந்தது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காட்டு பன்றிகள் நடமாட்டம் இருப்பதால் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிப்பதற்கு அச்சமாக உள்ளது.

மேலும் முதியவர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தை உடனடியாக வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...