மழை நீர் வடிகால்களில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு

கிக்கானி பள்ளி அருகில் அமைந்துள்ள பட்டேல் சாலை, உப்பிலிபாளையம், அவிநாசி மேம்பாலம் கீழ்பகுதி, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களை நேரில் சென்று பார்வையிட்டு மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழை நீர் வடிகால்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன்இன்று (23.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் நீர் வழித்தடங்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மாநகராட்சி ஆணையாளர்மத்திய மண்டலத்திற்குட்பட்ட கிக்கானி பள்ளி அருகில் அமைந்துள்ள பட்டேல் சாலை, உப்பிலிபாளையம், அவிநாசி மேம்பாலம் கீழ்பகுதி, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் செல்லும் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனடியாக சரி செய்யவும் மற்றும் மழைக்காலங்களில் மழைநீர் உடனடியாக வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-65 வீரப்ப தேவர் காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூய்மை பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், லங்கா கார்னர் பகுதியில், மழை நீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்- 32 சங்கனூர் மெயின் ரோடு ரத்தினபுரி, கன்னுசாமி கவுண்டர் லே-அவுட் பகுதியில் மழைக்காலங்களில் இப்பகுதியில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையாளர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...