கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்த 4 பேர் கைது

74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் போலி மதுவா அல்லது டாஸ்மாக் கடையில் வாங்கியதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.



Coimbatore: சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துக்குமார் நேற்று முன்தினம் (மே.22) இருகூர் ,ஏ.ஜி. புதூரில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில், பில்லு வலசை சேர்ந்த பிரபு (வயது 35) கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் இருந்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல சின்னியம்பாளையம் டாஸ்மாக் கடை எண்:1840 அருகே உள்ள பெட்டி கடையில் நேற்று (மே.22) மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், மணல் மேல குடியைச் சேர்ந்த காளிதாஸ் (48) பிரவீன் குமார் (24) ஆகியோர் கைது செய்தனர். பின்னர் 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் போலி மதுவா? டாஸ்மாக் கடையில் வாங்கியதா?என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...