விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஒன்று திரண்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை சிவானந்தா காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக கோவையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் இன்று சிவானாந்தா காலனி பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கவனம் செலுத்தும் தமிழக அமைச்சர்கள் ஏன் விவசாயிகளின் கோரிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் தாக்கப்பட்ட போது உடனடியாக அறவழிப் போராட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் விவசாயிகளின் அறவழிப்போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பிய மாணவர்களும், இளைஞர்களும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கையினை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராட்டங்களை தீவிரப்படுத்தப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...