ரெட் பிக்ஸ் யூ டியூபர் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - நீதிபதி உத்தரவு

கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரெட் பிக்ஸ் யூ டியூபர் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.


கோவை: பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வழக்கில் மற்றொரு நபராக ரெட் பிக்ஸ் யூ டியூபர் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு திருச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பெலிக்ஸ் ஜெரால்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று மாலையுடன் விசாரணை முடிந்த பிறகு அவரை போலீசார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வருகின்ற 31 ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...