கோவை குண்டுவெடிப்பு கைதி அபுதாஹீர் கைது

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அபுதாஹீர், தலைமறைவாக இருந்து உக்கடம் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் சி.பி.சி.ஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹீர் (45). இவர் கோவை குண்டுவெடிப்பில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தவர். இந்நிலையில் வெளியே வந்த பின்பு அவர் பணம் மோசடி மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. 

இவர் மீது காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ-டிக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ போலீசார் அபுதாஹீர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும் இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அபுதாஹீருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனை அறிந்ததும் அபுதாஹீர் தலைமறைவானார். 

அவரை சி.பி.சி.ஐபோலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்தனர். அப்போது அவர் உக்கடம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த அபுதாஹீரை சி.பி.சி.ஐ போலீசார் மே.23 கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...