கோவை- கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தும் வழித்தடங்களில் தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது- மாவட்ட வழங்கல் அதிகாரி தகவல்


கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படும் 18 வழித் தடங்கள் கண்டறியப்பட்டு அந்த வழிகளில்  தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தெரிவித்தார்.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் செல்லும் பயணிகள் ரயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தலைமையிலான அதிகாரிகள் கோவை ரயில் நிலையத்தில் நின்று இருந்த திருச்சூர் பயணிகள் ரயிலை சோதனையிட்டனர்.

அப்போது சிறு, சிறு மூட்டைகளாக 1.5 டன் அளவிற்கு ரேசன் அரிசி பயணிகளின் இருக்கைகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 1.5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். எனினும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யாரும் சிக்கவில்லை.

இந்நிலையில் இந்த சோதனை தொடர்பாக பேட்டியளித்த மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன், திருச்சூர் செல்லும் ரயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டு ரேசன் அரிசியை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்.

மேலும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டம் என்பதால் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி அதிகளவு கடத்தப்படுவதாகவும், கோவையில் இருந்து கேரளாவிற்கு அரிசி கடத்தப்படும் 18 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த 18 வழித்தடங்களில் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும், தற்போது நடைபெற்றுள்ள இந்த சோதனையில் கடத்தல்காரர்கள் யாரும் சிக்கவில்லை எனவும் மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...