கோவை வந்த ரயில்களில் 2 பேர் உயிரிழப்பு - ரயில் நிலையத்தில் மருத்துவ வசதி ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை

தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு வந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சேந்தமங்கலத்தை சேர்ந்த காஜா என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதேபோல், ஐலண்ட்எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரும் உயிரிந்தார்.


கோவை: கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இன்று மே.30 காலை தஞ்சாவூரிலிருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதில் எஸ் 11வது பெட்டியில் பயணம் செய்த திருவாரூர் அருகே உள்ள மன்னார்குடி, சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த காஜா (வயது 52) என்ற பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ரெயில் கோவை அருகில் வந்த போது அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் இது குறித்து அவரது மனைவி பூங்குழலி கொடுத்த புகாரின் பேரில் கோவை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோன்று நேற்று மே.29 இரவு பாலக்காட்டில் இருந்து பெங்களூர் சென்ற ஐலண்ட்எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் பயணம் செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணியும் கோவை அருகில் ரயில் வந்த போது திடீரென இறந்தார்.

அடுத்தடுத்து ரயிலில் வந்த பயணிகள் இறந்ததால் கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை வடவள்ளியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற பயணி கோவை ரயிலில் ஏறும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். எனவே, ரயில் நிலையங்களில் டாக்டர்கள் குழு உடன் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...