கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் 24 மணிநேர திட்டப்பணிகள் - ஆணையாளர் சிவகுருபிரபாகரன் ஆய்வு

வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம், சத்தி சாலை பழைய எம்.எஸ்.ஆர் டேங்க் பகுதி மற்றும் கிழக்கு மண்டலம் வார்டு எண்.60க்குட்பட்ட வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (07.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர், கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம், சத்தி சாலை பழைய எம்.எஸ்.ஆர் டேங்க் பகுதி மற்றும்



கிழக்கு மண்டலம் வார்டு எண்.60க்குட்பட்ட வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வுகளின்போது, மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர்கள் ஸ்ரீதேவி, கவிதா, செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, முருகேசன், உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, எழில், உதவி பொறியாளர்கள் இளங்கோவன், நாசர், ரவிக்கண்ணன், கல்யாணசுந்தரம், தலைமை நீர் பகுப்பாய்வுத்துறை சுகாதார ஆய்வாளர் சுரேஷ், சூயஸ் நிறுவன அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், பட்நாயக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...