வால்பாறை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு


வால்பாறை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் 65-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 6-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10-ம் தேதி வரை நடைபெற்றது. 



திருவிழாவின் கடைசி நாளான திங்களன்று காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தினை வள்ளிக்கன்னு, மதனகோபால் முதலியார், மருத்துவர் முனிசாமி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முத்துராஜ், நகராட்சி ஆணையாளர் சம்பத்குமார் மற்றும் வனத்துறையினர் ஆகியோர்கள் துவக்கி வைத்தனர்.



முன்னதாக, பக்தர்கள் அங்க அலகு பூட்டி நல்லகாத்து ஆற்றில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பறவைக்காவடியில் தொங்கியவாரு ஊர்வலமாக வந்து சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடைந்து வழிபாடுகள் செய்தனர்.



தொடர்ந்து கரகாட்டம், செண்டமேளம், சிக்காட்டம், இன்னிசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 8 மணியளவில் சுவாமி முக்கிய வீதிகள் தேர்பவனி சென்று இரவு 12 மணியளவில் கோவிலை வந்தடைதல் நடைபெற்று. இதைத்தொடர்ந்து, நள்ளிரவு 2 மணிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று 3 மணிக்கு வானவேடிக்கையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...