கோவை புலியகுளம் அரசு மகளிர் கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்

அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவுக்கு இன்றும் பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, வரும் 12ம் தேதியும், பி.ஏ., தமிழ் பாடப் பிரிவுக்கு 14ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.


கோவை: கோவை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று துவங்கியது.



அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவுக்கு இன்றும், பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய

பாடப்பிரிவுகளுக்கு, வரும் 12ம் தேதியும், பி.ஏ., தமிழ் பாடப் பிரிவுக்கு 14ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.



கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்கள், அசல் ஜாதிச் சான்றிதழ், இரண்டு நகல்கள், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட்சைஸ் புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும். சேர்க்கை கட்டணம் தொடர்பான விவரங்களை, www. gascwcbe.ac.in என்ற இணையதள முகவரி யில் தெரிந்து கொள்ளலாம்.



கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வர் வீரமணி கூறுகையில், காலை 9:30 மணிக்கு கலந்தாய்வு துவங்கும். மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள், கல்லூரிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். மாணவியருடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர், மட்டுமே வர வேண்டும். சேர்க்கை கிடைத்தவுடன், அன்றே கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...