தேக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.130.46 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வருவதை ஆட்சியர் ஆய்வு

காரமடை ஊராட்சி ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சியில் இன்று (ஏப்ரல் 11) ரூ.130.46 கோடி மதிப்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தொண்டாமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 



இதுகுறித்து ஆட்சியர் ஹரிஹரன் கூறுகையில், பவானி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு கோவை மாவட்டத்தைச் சார்ந்த தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி, தென்கரை, வேடபட்டி, தாளியூர், ஆலந்துறை, பேரூர் பேரூராடசிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 134 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.130.46 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.



மேற்கண்ட 7 பேரூராட்சிகளின் 2014ஆம் ஆண்டின்படி மக்கட்தொகை 71,800 இடைக்கால மக்கட்தொகை (2029) 83,400 மற்றும் உச்சகட்ட மக்கட்தொகை (2044) 96,000 என கணக்கிடப்பட்டு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் விகிதாசாரத்திலும் மற்றும் 134 ஊரக குடியிருப்புகளுக்கு (2014) மக்கட்தொகை 72,463 இடைக்கால மக்கட்தொகை (2029) 79,718 மற்றும் உச்சகட்ட மக்கட்தொகை (2044) 86,964 என கணக்கிடப்பட்டு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் மொத்தம் நாளொன்றுக்கு இடைக்கால தேவையான 11.95-அனை மற்றும் உச்சகட்ட தேவையான 13.81 அனை-ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக பத்திரகாளியம்மன் கோயில் அருகே செல்லும் பவானி ஆற்றை ஆதாரமாக கொண்டு பவானி ஆற்றில் 3.0 மீட்டர் விட்டம் உள்ள நீர் புகு கிணறு மற்றும் 6.0 விட்டமுள்ள நீர் சேமிப்பு கிணற்றோடு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு 500 மி.மீ விட்டமுள்ள குழாய்கள் மூலம் 12.19 கி.மீ தூரத்திற்கு குருந்தமலை கோவில் அருகில் அமைக்கப்படவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

பின்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது 500 மி.மீ விட்டமுள்ள நீருந்து குழாய்கள் மூலம் வீரபாண்டி அருகிலுள்ள நீருந்து நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து நீருந்து குழாய்கள் வழியோரத்திலுள்ள வேடபட்டி, தாளியூர், ஆலந்துறை, தொண்டாமுத்தூர், பேரூர் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு தேவையான அமைக்கப்படவுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளும் 134 ஊரக குடியிருப்புக்கான குடிநீர் தனிதனியாக அமைக்கப்படவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியிலும் மற்றும் மீதமுள்ள தென்கரை, ஆலந்துறை மற்றும் பூலுவப்பட்டி பேரூராட்சிகளுக்கு தேவையான குடிநீர் தண்ணீர் பந்தலில் அமைக்கப்படவுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு பேரூராட்சிகளில் தனித்தனியாக அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இத்திட்டத்தில் பிரதான குழாய்கள் மற்றும் துணை பிரதான குழாய்கள் 221.14 கி.மீ நீளத்திற்கும் பகிர்மான குழாய்கள் 149.4 கி.மீ நீளத்திற்கும் பதித்து 39 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் 75 சதவிகித பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.



இத்திட்டத்தை ஜுன்- 2017ல் முடித்து பொதுமக்கள் பயனுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ரூபன் சங்கர் ராஜா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பாஸ்கரன், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...