வறட்சியால் கோவையை சேர்ந்த விவசாயி தற்கொலை!


கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பச்சே கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(75). 

அதே பகுதியில் ஆறுமுகத்திற்கு சொந்தமாக 2 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. தோப்பில் இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் தனது தோப்பில் இரண்டு இடங்களில் போர்வெல் அமைக்க முடிவு செய்தார். 

தொடர்ந்து, சுமார் 3 லட்சம் ரூபாய் வரை செலவழித்து இரு இடங்களில் போர்வெல் அமைத்தார். ஆனால், ஆயிரத்து 300 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. இதனால் மனமுடைந்த ஆறுமுகம் நேற்று மதியம் பூச்சி மருந்து அருந்தினார். இதறிந்த அவரது குடும்பத்தார், அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர். ஆறுமுகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்  வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்ந்து, 32-வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், வறட்சியினால் கோவையை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...