வால்பாறை தேயிலை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.450 கூலி வழங்க வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்


வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக நாளொன்றுக்கு ரூ.450 வீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சார்பாக வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கேரளாவில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாயிக்கும் மேல் தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவாகவே வழங்கப்படுகிறது. 



எனவே, அரசுக்கும், தேயிலை தோட்ட நிர்வாகத்தினரும் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலார்களுக்கு நாளொன்றுக்கு 450 ரூபாய் வீதம் வழங்க வேண்டும்' என்று உரையாற்றினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கௌரவ தலைவர் கோவிந்தராஜன், பொதுச்செயலாளர் மோகன், துணைத்தலைவர்கள் மாணிக்கம், சின்னப்பன், ஜீவனந்தம், பாலகிருஷ்ணன், அண்ணாதுரை ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம், ஆனைமலையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வால்பாறை காவல் நிலையத்தில் ஏஐடியுசி, பாஜக-வினர் புகார்

வால்பாறை ஏஐடியுசி-வினர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் பேசுகையில் அத்துமீறி கூட்டத்தில் நுழைந்த பாஜக-வினர் மைக்குகளை பிடுங்கி உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐஎம் மற்றும் ஏஐடியுசி-வினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே, ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டக் கூட்டத்தின் போது பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தனது உரையில், பிரதமர் மோடியை தவறாக பேசியதாக வால்பாறை பாஜக மண்டல பொதுச்செயலாளர் கார்த்திக் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை தேச விரோதிகள் என்று மிகவும் கீழ் தரமாக பேசிய சிபிஐஎம் வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்க தலைவர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...