கோவை வடவள்ளியில் விரைவில் திறக்கப்படவுள்ள 'ALVEAL FUN SAVVY' மால்: 5 பிவிஆர் திரைகளுடன் கூடிய அதிநவீன வசதிகள்

கோவை வடவள்ளியில் 'ALVEAL FUN SAVVY' மால் விரைவில் திறக்கப்பட உள்ளது. 5 பிவிஆர் திரைகள், ஐநாக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட இந்த மால் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் விரைவில் திறக்கப்பட உள்ள 'அல்வியல் ஃபன் சாவி' (ALVEAL FUN SAVVY) மால் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய மால் 5 பிவிஆர் திரைகளுடன் கூடிய அதிநவீன வசதிகளுடன் திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



பிஎன் புதூர் வடவள்ளி பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த மாலில் 5 திரைகளுடன் கூடிய பிவிஆர் திரையரங்குகள் ஐநாக்ஸ் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பிவிஆர் திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மூன்றாவதாக இந்த புதிய மால் திறக்கப்பட உள்ளது.

தற்போது இந்த மாலின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வடவள்ளி பகுதியில் இந்த மால் அமைய உள்ளதால், கோவை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பீனிக்ஸ் மால் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 'அல்வியல் ஃபன் சாவி' மால் திறக்கப்பட உள்ளது பொதுமக்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய மால் திறக்கப்படுவதன் மூலம் கோவை மக்களுக்கு மேலும் ஒரு பொழுதுபோக்கு மற்றும் வணிக மையம் கிடைக்க உள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...