பொள்ளாச்சி நவமலையில் யானைகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி நவமலை பகுதியில் மூன்று நாட்களாக யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வனத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சியை அடுத்த நவமலை சாலை ஓரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குட்டிகளுடன் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நவமலையில் மின்வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நவமலை பகுதியில் உள்ள மாணவர்கள் படிப்புக்காக ஆழியார், அங்கலக்குறிச்சி மற்றும் கோட்டூர் பொள்ளாச்சிக்கு சென்று வருகின்றனர்.



இந்நிலையில், ஆழியாரிலிருந்து நவமலை செல்லும் சாலையின் ஓரத்தில் கடந்த மூன்று நாட்களாக குட்டிகளுடன் யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் இவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்கு வந்த யானைகள் கூட்டம், அங்குள்ள பலா மரங்களில் இருந்த பலாப்பழங்களை உண்டுள்ளது. இதனால் நவமலையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வனத்துறையினர் சுழற்சி முறையில் யானைக் கூட்டங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...