குடியிருப்பு பட்டா கோரி அனுப்பர்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், அனுப்பர்பாளையம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கோரி கோவை மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தலைமையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குடியிருக்க பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் பட்டா வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் ஆகியோரைச் சந்தித்து தெரிவித்தபோது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களுக்கு தெலுங்குபாளையம் பகுதியில் இடம் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

சுமார், 3 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. தற்போது, பருவமழை பெய்யாததால் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த எங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...