கோவை ஒண்டிப்புதூரில் மனைவி, மகள்களை கொன்ற குடிகார தந்தை கைது

கோவை ஒண்டிப்புதூரில் குடிப்பழக்கத்தால் வேலையை இழந்த தந்தை, பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் இரு மகள்களை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். போலீஸ் விசாரணையில் உண்மை வெளிப்பட்டது.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலணி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் குடும்பத் தலைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கராஜ் (40) என்ற கூலித் தொழிலாளி, கடந்த ஆறு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்தி வந்தார். இதனால் அவரது மனைவி புஷ்பா (35) உடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.



இந்நிலையில், ஜூலை 8 ஆம் தேதி காலை, தங்கராஜ் தனது மனைவி மற்றும் இரு மகள்களான ஹரிணி (9) மற்றும் ஷிவானி (3) ஆகியோர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தங்கராஜிடம் நடத்திய விசாரணையில், அவர் முரணான தகவல்களை அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில், குடிப்பதற்கு பணம் கேட்டு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தங்கராஜ் கோபத்தில் முதலில் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டியில் தள்ளியதும், அவளை காப்பாற்ற முயன்ற மனைவி புஷ்பாவையும், பின்னர் இளைய மகள் ஷிவானியையும் தொட்டியில் தள்ளி, அதன் மூடியை மூடி கொலை செய்த உண்மை வெளிப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட தங்கராஜை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...