கோயம்புத்தூர் கற்பகம் பல்கலையில் 'துளிர்-2024' வரவேற்பு விழா

கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 'துளிர்-2024' வரவேற்பு விழா ஜூலை 3 முதல் 9 வரை நடைபெற்றது. மாணவர்களின் வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் குறித்து பல்வேறு தலைவர்கள் உரையாற்றினர்.


கோவை: கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'துளிர்–2024' விழா ஜூலை 3, 4, 5 மற்றும் 8, 9 ஆகிய ஐந்து நாட்கள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தமது தலைமையுரையில், "நவீனத் தொழில்நுட்பம் மிக்க நாடுகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் அயராத உழைப்பில் இருக்கிறது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் விளங்க வேண்டும். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொள்ள வேண்டும்" என்று சிறப்புரை வழங்கினார்.



ஐந்தாம் நாள் (09.07.2024) நிகழ்வில் இன்போசிஸ் நிறுவனத்தின் AVP & HR லீடர், 'மாற்றம்' அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜே. சுஜித் குமார் சிறப்புரை வழங்கினார்.



அவர், "மாணவர்கள் தங்களது குறிக்கோளைத் திட்டமிட்டு, காலத்தை முறையாகப் பயன்படுத்தி, தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயன்றால் வெற்றி உறுதி" என்று அறிவுறுத்தினார்.

கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கே.இராமசாமி, "மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பயின்று வெற்றி பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார். துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி, தாய்நாட்டின் பெருமை, மாணவர்களின் கடமை, மாணவர்களின் நலனுக்காக பெற்றோர்களின் உழைப்பு, வெற்றியின் மீதான மன ஒருமைப்பாட்டின் இன்றியமையாமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

விழாவின் நிறைவாக மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...